மது அருந்துவதற்கு மனைவி காசு தராததினால் ஒருவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரியமங்கலம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் துணிக்கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் மதுபானத்தை அருந்துவதற்காக தனது மனைவியிடம் காசு கேட்டு தகராறு செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனை அடுத்து தனது மகள் மற்றும் மனைவியிடம் மதுபானம் […]
