திண்டுக்கல் அருகே குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குட்டியபட்டி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் சில தினங்களாக குடிநீர் சரியாக வினியோகிக்கபடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிக்கும் நீரை கூட விலைக்கு வாங்கி உபயோகித்து வந்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஊராட்சி ஒன்றிய அதிகாரி மற்றும் ஊராட்சி மன்றத்தில் அப்பகுதி மக்கள் பலமுறை […]
