குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள கீழசொக்கநாதபுரம் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக அப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிக்கவும் தண்ணீர் இல்லாமல் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் உடனடியாக வழங்க […]
