குடிநீர் பிரச்சனைகள் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து குடிமராமத்து பணிகள் குறித்தும் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், கோடை காலம் என்பதால் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கியதாக தெரிவித்தார். குடிமராமத்து திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் […]
