தமிழகத்தில் சட்டவிரோதமாக இயங்கும் குடிநீர் நிறுவனங்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள சென்னை உயர்நீதிமன்றம் ஏழைகளுக்கு குடிநீர் வழங்காத நிறுவனங்களை மூடலாம் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சட்ட விரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து சிவமுத்து என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற உத்தரவை வெறும் 143 நிறுவனங்கள் மட்டுமே செயல் படுத்தியதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது தமிழகம் முழுவதும் […]
