நீர் மேலாண்மையில் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளதாக தமிழக அரசு மார்தட்டிக் கொள்ளும் நிலையில் 14 ஆண்டுகளாக குடிநீரின்றி தவிப்பதாக மதுரை தனக்கன்குளம் பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட தனக்கன்குளம் பகுதியில் உள்ள வெண்கலம் மூர்த்தி நகரில் கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 170 வீடுகள் கட்டப்பட்டு 170 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் […]
