அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணிற்கு குடல்வால்வை அகற்றினர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேதுபாவாசத்திரம் மீனவர் காலனி பகுதியில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி இருக்கின்றார். இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்து நிலையில் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அப்போது கலைச்செல்விக்கு குடல்வால்வு வீக்கம் இருந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கலைச்செல்வி சிகிச்சைகாக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அந்த மருத்துவமனையில் தலைமை […]
