தேசிய குடற்புழு நீக்கம் வாரத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று (மார்ச்14) முதல் 21ஆம் தேதி வரை சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு அதன் மாத்திரை வழங்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக பொதுசுகாதாரத் துறை வெளியிட்ட செய்திகுறிப்பில், குடற்புழு நீக்கம் வாரம் இன்று முதல் 21ஆம் தேதி வரையிலும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நடைபெறும் முகாமில் 1-19 வயது வரையிலான சிறார்கள், கருவுறாத மற்றும் பாலுாட்டாத 20-30 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். இதில் ஒன்று […]
