தமிழகத் தொல்லியல் துறை சார்பில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி முதல் கீழடி, அகரம், கொந்தகையில் அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் 9, அகரத்தில் 6, கொந்தகையில் 4 என மொத்தம் 19 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றனர். இதில் கீழடியில் ஒரு உறை கிணறும், அகரத்தில் 4 உறைக்கிணறுகளும் கண்டறியப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அகரம் தளத்தில் சரிந்த நிலையில் இரண்டு அடுக்குகள் மட்டுமே வெளிப்பட்டுள்ள நிலையில் தற்போது 9 அடுக்குகள் வரை வெளிப்பட்டுள்ளது. […]
