திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியா முழுவதும் இளநிலை படிப்புகளில் சேருவதற்காக 45 மத்திய பல்கலைக்கழகங்களில் கட்டாய பொது நுழைவுத்தேர்வு இந்த கல்வி ஆண்டு முதல் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஒன்றிய அரசு மாணவர்களின் மீது தொடுத்துள்ள அடுத்தகட்ட தாக்குதலாகும். சுமார் மூன்றரை மணி நேரம் நடக்க உள்ள இந்த தேர்வில் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து அனைத்து கேள்விகளும் கேட்கப்படும் […]
