கிழக்கு ஆசிய நாடான வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் அதிபர் கிம்மின் மேற்பார்வையில் அந்த நாட்டின் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான “வாசோங் – 17” பரிசோதனை செய்யப்பட்டது. அமெரிக்ககாவை தகர்க்கும் திறன் உடைய இந்த ஏவுகணையை வடகொரியா பரிசோதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மேலும் பல்வேறு சக்தி வாய்ந்த ஆயுதங்களை வடகொரியா தயாரிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
