வனத்துறையினருக்கு சொந்தமான மலையில் அனுமதியின்றி கட்டப்பட்டு வந்த கிறிஸ்துவ ஆலயப் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொருவளூர் எல்லையில் மோடங்கல் மலை ஒன்று இருக்கின்றது. இந்த மலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மூங்கில்துறைப்பட்டை சேர்ந்த தனிநபர் ஒருவர் சிறிய அளவில் கிறிஸ்தவ ஆலயத்தை கட்டி வருகின்றார். அதில் ஏசுநாதர் மற்றும் மாதா ஆகிய 2 சொரூபங்கள் தனித்தனியாக அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கிறிஸ்துவ ஆலயம் கட்டுவதற்கு அப்பகுதியில் இருக்கக்கூடிய […]
