பெரம்பலூரில் கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர் பெற்ற நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். கிறிஸ்தவர்கள் அன்றைய தினம் புத்தாடை அணிந்து ஆலயங்களுக்குச் சென்று திருப்பலி, சிறப்பு பிரார்த்தனை ஆகியவற்றில் கலந்து கொள்வார்கள். இந்த வருடம் நேற்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நேற்று முன்தினம் […]
