பட்டா வழங்குவதற்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள குள்ளபுரத்தில் வசித்து வரும் ஈஸ்வரன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நிலத்திற்கு பட்டா மாறுதல் மற்றும் தனிப்பட்டா கேட்டு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்துள்ளார். இந்நிலையில் அலுவலக அதிகாரிகள் அவருக்கு பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து குள்ளபுரம் கிராம நிர்வாக அலுவலர் […]
