கிணற்றுக்குள் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேந்திரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள தோட்டத்து விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது நண்பர்களுடன் சேர்ந்து மகேந்திரன் கிணற்றில் டைவ் அடித்து விளையாடி கொண்டிருந்தார். இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் கிணற்றிலிருந்து மகேந்திரன் வெளியே வராததால் அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து கிணற்றுக்குள் இறங்கி தேடினர். […]
