கிணற்றுக்குள் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கரூர் மாவட்டத்தில் உள்ள குட்டைகடை ஆலம்பாளையம் பகுதியில் விவசாயியான பெரியசாமி(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பசுமாடுகள் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக 70 அடி ஆழ கிணற்றில் பசுமாடு ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெரியசாமி உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]
