உசிலம்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறை வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் முருகன்.. விவசாயியான முருகன் தனது 5 மாத சினைவுற்றிருந்த பசுமாட்டை மேய்ச்சலுக்காக அவரின் தோட்டத்தில் கட்டி வைத்து விட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக தோட்டத்திலிருந்த கிணற்றுக்குள் பசுமாடு தவறி விழுந்துள்ளது. அதனைக் கண்ட கண்ணன் உடனடியாக உசிலம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் […]
