கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முனைஞ்சிப்பட்டி பகுதியில் விவசாயியான தேவசகாயம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கீழகோடன்குளத்தில் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்நிலையில் தோட்டத்தில் உள்ள மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டதால் அதை கிணற்று பகுதியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தேவசகாயம் திடீரென கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனால் தேவசகாயம் கிணற்றில் தத்தளித்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தேவசகாயம் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால் […]
