மதுபோதையில் மாமரத்தில் மாங்காய் பறிக்க ஏறி தையல் தொழிலாளி கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . திருவண்ணாமலை மாவட்டம் பண்டிதபட்டு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் தையல் தொழில் செய்து வருகிறார். இவர் மதுபோதையில்அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த மாமரத்தில் மாங்காய் பறிப்பதற்காக மரத்தில் ஏறியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் மதுபோதையில் இருந்ததால் மரத்திலிருந்து தவறி கீழே இருந்த கிணற்றில் விழுந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தனர். […]
