கிணற்றுக்கு குளிக்க சென்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் விவசாயியாக உள்ளார். இவருக்கு 15 வயதில் நாவுக்கரசி என்ற மகள் உள்ளார். நாவுக்கரசி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நாவுக்கரசியும் அவரது சகோதரி கவியரசி மற்றும் சகோதரர் தேவா ஆகிய மூவரும் அப்பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். […]
