மர்மமான முறையில் குழந்தையுடன் பெண் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே காஸ்தியான்வெட்டி பகுதியில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் குழந்தையுடன் பெண் சடலமாக மிதந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியைடைந்த பொதுமக்கள் ஆற்காடு டவுன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கிணற்றில் இருந்த 2 பேரின் சடலத்தையும் மீட்டனர். அதன்பிறகு 2 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக […]
