மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளியை கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முனைஞ்சிப்பட்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான ராமர் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு தங்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு முத்துப்பாண்டி என்ற மகனும், ஆனந்தி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் ராமரின் உறவினரான சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து […]
