கிணற்றில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே கூகையூர் கிராமத்தில் ஒரு விவசாய கிணறு உள்ளது. இந்தக் கிணற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்த சிலர் கீழ்குப்பம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கிணற்றில் கிடந்த ஆணின் சடலத்தை மீட்டனர். அந்த சடலத்தில் காயங்கள் இருந்தது. அவருடைய நெஞ்சில் […]
