நாமக்கல் மாவட்டத்தில் 40 அடி கிணற்றுக்குள் விழுந்த நரியை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள புத்தூர் கிழக்கு ஏரிக்கரை பகுதியில் 40 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. இதனையடுத்து கிணற்றில் தண்ணீர் இல்லாத நிலையில் அப்பகுதியில் வந்த நரி ஒன்று தவறி விழுந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேஸ்வரன் தலைமையில் […]
