பீகார் முசாபர்பூர் நகரில் வசித்து வருபவர் சுனிதா தேவி (38). இவருக்கு சென்ற சில நாட்களாக வயிற்று வலி ஏற்பட்டதால், அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சுனிதா தேவியை பரிசோதனை செய்த மருத்துவர், அவருக்கு கர்ப்பப்பை கோளாறு உள்ளதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதன் காரணமாக அவருக்கு சென்ற செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவரது உடல்நிலை மேலும் மோசமாக காணப்பட்டதால், வேறொரு மருத்துவமனையை அணுகி உள்ளார். […]
