சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தமிழக பாஜக சிந்தனையாளர் பிரிவு சார்பில் தமிழக உரையாடல்கள்-2022 தமிழகம்-கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்கிற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, பொதுவாக அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கிறது. பாஜக தேசிய கட்சி என்பதால் தமிழகத்தில் ஒரு கிளை இருந்து விட்டு போகட்டும் என்பதற்காக பாஜக தொடங்கப்படவில்லை. […]
