காதலித்து திருமணம் செய்த பெண் தனது கணவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருமாநல்லூர் பகுதியில் தர்மதுரை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 23 வயதுடைய பிரவீன் என்ற மகன் இருக்கின்றார். அதே பகுதியில் மருதப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படிக்கும் மகாலட்சுமி என்ற மகள் இருக்கின்றார். கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரவீனும், மகாலட்சுமியும் காதலித்து வந்துள்ளனர். […]
