வழிபாட்டுத்தலத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. ஈரான் நாட்டில் ஷிராஸ் நகரில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலம் அமைந்துள்ளது. இந்த வழிபாட்டுத்தலத்தில் கடந்த 26ம் தேதி அன்று பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 40-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதற்கிடையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மூன்று பயங்கரவாதிகளில் […]
