தஞ்சை மாவட்டத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்தவர் கருணாகரன். இவர் சென்ற வாரம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தொடர்ச்சியாக சிகிச்சையளிக்கப்பட்டு வந்தாலும் இவரின் உடல்நிலை மிகவும் மோசமானதால், அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது உடல் காவல் துறை மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் வெடிக்கப்பட்டு […]
