தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு தலைமையில் இன்று 4 மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.O குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கைது செய்வது, குட்கா மற்றும் போதைப் பொருள்களை ஒழிப்பது, போதைக்கு அடிமையான மாணவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு நடவடிக்கை எடுப்பது, ரவுடி மற்றும் சமூக விரோதிகள் மீது எடுக்கப்பட்ட […]
