பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் உள்ள தெற்குவாடி புது தெருவில் பூமாதேவி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பூமாதேவி தனது குழந்தைகளுடன் சொந்த ஊரான மானாமதுரைக்கு செல்வதற்கு ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளார். இதனையடுத்து பேருந்தில் மிகவும் கூட்டமாக இருந்ததால் அதனை பயன்படுத்திய மர்மநபர் யாரோ பூமாதேவி […]
