விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் பணிபுரியும் 400க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு துணை சூப்பிரண்டு அதிகாரி ராமகிருஷ்ணன் சார்பில் முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காலத்தில் முககவசம் நம்முடைய உயிர்க்கவசமாக மாறியுள்ளது. இத்தகைய காலகட்டத்தில் முக கவசம் அணிவதால் மட்டுமே கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பணி புரியும் காவலர்களுக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு அதிகாரி ராமகிருஷ்ணன் முக கவசம் வழங்கியுள்ளார். இதனையடுத்து […]
