மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து புறப்பட்டு பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ரயில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் ரயில் நிலைய 3-வது நடைமேடையை அடைந்து பிறகு புறப்பட்டது. அப்போது ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்று எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். இதனால் கால்கள் துண்டான நிலையில் படுகாயத்துடன் கிடந்த அந்த நபரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து […]
