கோவிலை திறக்க சொல்லி காவலாளியிடம் கொலை மிரட்டல் விடுத்த ஒருவரை கைது செய்த நிலையில் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் வீரபாண்டியை அடுத்துள்ள கோட்டூர் கிழக்குத் தெருவில் செல்லப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீரபாண்டி பகுதியில் உள்ள கன்னீஸ்வரமுடையார் கோவிலில் இரவுநேர காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி வழக்கம்போல செல்லப்பா பணியில் இருந்துள்ளார். அப்போது அங்கு பழனிசெட்டிபட்டி சேர்ந்த சண்முகம், சுந்தர், வசந்த் ஆகிய 3 வந்துள்ளனர். […]
