ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை தாக்கி விட்டு தப்பி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்துசெட்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள அன்னமார் கோவிலில் உள்ள உண்டியலில் பணம் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காவல்நிலையத்தில் இணைப்பு காவலராக பணியாற்றி வரும் திருப்பூர் ஆயுதப்படை காவலரான அருள் குமார் என்பவர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவினாசி முத்து செட்டிபாளையம் […]
