தண்னிடம் தவறாக நடக்க வந்தவரை கத்தியால் குத்திய பெண்ணை காவலர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அல்லி மேடு கிராமத்தில் வசிப்பவர் கௌதமி. தாய், தந்தையை இழந்த இவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று கௌதமி இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த அவருடைய உறவினரான அஜித் என்பவர் கௌதமியை கத்திமுனையில் மிரட்டி துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார். இதனால் தனியாக இருந்த அவர் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக போராடி […]
