புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பண்ணசுவாமி கோவிலுக்கு சொந்தமான காளை உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குறும்பட்டி கிராமத்தில் கருப்பண்ணசுவாமி கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் பொது மக்கள் கோவிலுக்கு சொந்தமாக காளை ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். அந்த காளைக்கு கடந்த ஒரு வாரமாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ள நிலையில் திடீரென இறந்து விட்டது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊர் பொது மக்கள் மிகுந்த மன வேதனை […]
