சம்பா பயிர் காப்பீட்டுக்கான காலகெடுவை நவம்பர் மாதம் இறுதிவரை நீடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது twitter பக்கத்தில், தமிழகத்தில் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவேறுவதாக தமிழக வேளாண் துறை அறிவித்திருக்கிறது. காப்பீடு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் போதுமானது அல்ல. தமிழகத்தில் சம்பா நடவு மற்றும் விதைப்பு பணிகள் இப்போதுதான் தீவிரமடைந்து வருகிறது. பருவமழை காரணமாக […]
