கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் ஸ்டாலின், வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம் என்று தெரிவித்துள்ளார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் 17 வயதான மகள் பிரியா. ராணி மேரி கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்த பிரியா கால்பந்து வீராங்கனை ஆவார். பிரியா கால்பந்து விளையாட்டில் மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூட்டு வலி ஏற்பட்டதை […]
