கால்நடை சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டியில் வியாழக்கிழமை தோறும் கால்நடை சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இந்த சந்தையில் தமிழக அரசின் சார்பில் வெள்ளாடுகள் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஆடுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆடுகளின் எடைக்கு ஏற்ப அதனுடைய விலை ரூ.4000 முதல் ரூ.8000 வரை விற்பனையானது. கடந்த […]
