செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகின்ற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் முக்கிய பிரதான மையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாமல்லபுரம் ஐந்துரதம் அருகில் உள்ள வெண்புருஷம் சாலை ஓரத்தில் நேற்று காலை ஏராளமான மிட்டாய் பாக்கெட்டுகள் குவியல் குவியலாக வீசப்பட்டு கிடந்தது. அப்போது அந்த வழியாக நடை பயிற்சிக்கு சென்ற சிலர் இது குறித்து கொடுத்து […]
