உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் கடைகளில் வைத்திருந்த காலாவதியான 300 லிட்டர் குளிர்பானங்களை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனின் உத்தரவின் படி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ராகவன் தலைமையில் அதிகாரிகள் ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் மற்றும் தேனி பிரதான சாலைகளில் உள்ள உணவகங்கள், கடைகள், பேக்கரிகள் மற்றும் பலசரக்கு கடைகள் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் உணவுப் பொருள்களை வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. […]
