கார் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரீஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வெம்பூரில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பணியை முடித்து விட்டு மாரீஸ்வரி வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக திருச்செந்தூரில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மாரீஸ்வரி மீது மோதியது. […]
