கார் மோதி தையல் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை அம்பாசமுத்திரம்-பாளையங்கோட்டை சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று திடீரென சந்திரசேகரின் மீது மோதியது. இதில் சந்திரசேகர் பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் சந்திரசேகரை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு […]
