கார் மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலக்குண்டு பகுதியில் ஆட்டோ டிரைவரான முத்தலிப் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்தலிப் வத்தலக்குண்டில் இருந்து பட்டிவீரன்பட்டிக்கு தனது ஆட்டோவில் இரண்டு பயணிகளுடன் சென்றுள்ளார். இதனை அடுத்து திண்டுக்கல்லில் வசிக்கும் பிரதீப் என்பவர் தனது காரில் தேனி நோக்கி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரதீப் ஓட்டிச் சென்ற காரானது முத்தலிப்பின் […]
