மரத்தில் கார் மோதிய விபத்தில் தந்தை-மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள குட்டைக்காடு பகுதியில் விவசாயியான விவேகானந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆதித்யா என்ற மகன் இருந்துள்ளார். இவர் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் காங்கேயத்திற்கு விவேகானந்தனும், ஆதித்யாவும் வந்துள்ளனர். அதன்பின் காரில் காங்கேயம்-சென்னிமலை சாலை வழியாக வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை விவேகானந்தன் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். காரின் இடது இருக்கையில் ஆதித்யா அமர்ந்திருந்தார். இந்நிலையில் […]
