நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வாகனங்களில் பேட்டரி திருடிய கும்பலை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மேலும் இருவர் தலைமறைவாக உள்ளனர். நெல்லை மாவட்டம் காவல்கிணறு, வடக்கன்குளம், பணகுடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக டிராக்டர்கள், கார்கள், ஆட்டோக்கள் ஆகிய வாகனங்களில் இரவு நேரங்களில் பேட்டரிகள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. இது குறித்து போலீஸ் விசாரித்து வந்தனர். இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது அவர் தலைமையில் தனிப்படை அமைத்து ரகசியமாக விசாரணை நடந்தது. தற்போது பேட்டரிகளை திருடி […]
