சாலையை கடக்க முயன்ற விற்பனையாளர் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் லோயர்கேம்ப் அருகே உள்ள சுருளியாறு மின்நிலையம் சாலையில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். தேனி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வரும் இவருக்கு ராஜ செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று செல்லதுரை வழக்கம்போல டாஸ்மாக் கடைக்கு சென்று வேலையை முடித்துவிட்டு மீண்டும் பேருந்தில் […]
