கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்த 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள துவாரகாவில் இச்சம்பவம் அரேங்கேறியுள்ளது. இது குறித்து டெல்லி காவல்துறையினர் அறிக்கையின்படி, குளியலறையில் உள்ள ஹீட்டரில் இருந்து கார்பன் மோனாக்சைடு கசிந்துள்ளது. இதற்கிடையில் குளியலறையில் குளிப்பதற்குச் சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வெளியே வராமல் இருந்துள்ளார். இதையடுத்து சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது சிறுமி மயக்கமான நிலையில் கிடந்துள்ளார். அதன்பின் சிறுமியை அவரது குடும்பத்தினர் […]
