பெய்ஜிங்கில் கடும் காற்று மாசுபாடு ஏற்பட்டதால் மைதானங்களும், பள்ளிகளும் அடைக்கப்பட்டுள்ளன. நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கப்பட்டதால், அதிலிருந்து அதிகளவில் கார்பன் நச்சு வெளியேறி காற்று மாசை ஏற்படுத்தியதாக ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும், பெய்ஜிங்கில் சுமார் 200 மீட்டர் தூரத்தில் செல்லும் வாகனங்களும் கண்களுக்கு தெரியாத வகையில் காற்று மாசடைந்துள்ளது. இதனால், பல மக்கள் கண் எரிச்சல், தொண்டை வலி, நுரையீரல் பாதிப்பு மற்றும் மூச்சு திணறல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். எனவே, அங்கு மைதானங்கள், பள்ளிகள் மற்றும் […]
